தே.ஜ. கூட்டணில். தொடர்ந்து நீடிப்போம்: வாழப்பாடி பேட்டி
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் பாட்டாளி மக்கள் கட்சிஅந்த கூட்டணியில் இருக்காது என ராமதாஸ் கூறுவது கூட்டணியை விட்டு விலகுவதற்குகூறப்படும் காரணம் என கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதாவது:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் பாட்டாளி மக்கள் கட்சிஅந்த கூட்டணியில் நீடிக்காது என கூறுவது வெறும் மிரட்டல். இது வரவிருக்கும் தேர்தலில்அதிக இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மிரட்டும்செய்கையாகும்.
கூட்டணியில் யார் தொடர வேண்டும். யார் தொடர கூடாது என சொல்ல கூட்டணியில்அங்கம் வகிக்கும் எந்த கட்சிக்கும் உரிமை கிடையாது.
ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வை விமர்சிப்பதுதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை பாதிக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க பா.ம.க. விரும்பவில்லை என்றால் முதலில் மத்தியஅமைச்சரவையில் பதவி வகிக்கும் பா.ம.க. அமைச்சர்களை பதவி விலகிச் சொல்லவேண்டும்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகாது. வரவிருக்கும்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்ந்து போட்டியிடும் என கூறினார்.
யு.என்.ஐ.