ஆனந்துக்கு ரூ.15 லட்சம் .. வழங்குகிறது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ 15 லட்சமும்,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ரூ 6 லட்சமும் வழங்கிகவுரவிக்க இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி கூறியிருப்பதாவது:

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ 15 லட்சமும்,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ரூ 6 லட்சமும்வழங்கப்படும்.

ஆனந்திற்கும், மல்லேஸ்வரிக்கும் பத்மபூஷன் பட்டம் வழங்குமாறு பிரதமருக்கு நான்கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருது பெறுவோர்பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இவர்கள் இருவருக்கும் விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை தாமதமாக வந்துள்ளது எனவும் பிரதமர் அலுவலகம்தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் இறுதியில் போட்டிகள் நடந்தன. அதனால் இந்த விஷயத்தில்என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.ஆனால் சிட்னி ஒலிம்பிக்கிற்கு இந்திய அணிசெல்லும் முன்பே இந்திய அணியினருக்கு பிரதமர் கொடுத்த உறுதிமொழிப்படிஅவர்களை நான் கவரவிக்க விரும்புகிறேன் என கூறினார்.

விஸ்வநாதன் ஆணந்தும், மல்லேஸ்வரியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். இந்தஆண்டிற்கான கேல் ரத்னா விருதை மல்லேஸ்வரிக்கு வழங்குவது பற்றி விளையாட்டுஅமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+