பரூக் மீது குண்டுவீச்சு .. கருணாநிதி கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா மீது வெடிகுண்டு வீச்சு நடந்தது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிகவலை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நடந்த பாலம் திறப்பு விழாவின்போது பரூக் அப்துல்லாவை குறிவைத்துவெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக பரூக் அப்துல்லா தப்பினார். யாருக்கும் காயம் ஏதும்ஏற்படவில்லை.
இதுகுறித்து கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். பரூக் அப்துல்லாவிற்கு அவர் அனுப்பியுள்ள பேக்ஸ்செய்தியில், தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலிலிருந்து தாங்கள் தப்பி விட்டீர்கள் என்ற செய்தியைக்கேட்டதும் பெரும் நிம்மதி அடைந்தேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காகவும், இந்தியாவுக்காகவும் தாங்கள் நீண்ட காலம் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும்என்று இதயப்பூர்வமாக விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications