மிசா. பாண்டியனுக்கு வீடு கொடுத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் மைசூர் நகரில் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுத்தவரை மதுரை சிறப்புப் போலீஸ் படை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிசா. பாண்டியனுக்கும் தொடர்புஇருப்பதாக, போலீஸில் சரணடைந்த, வரிச்சியூர் செல்வம் என்பவர் வாக்குமூலம கொடுத்திருந்தார். இதையடுத்துமிசா. பாண்டியன் தலைமறைவானார்.

சிறப்புப் போலீஸ் படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.திங்கள்கிழமை மிசா. பாண்டியனுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போஸ் (48) என்ற அந்த நபர் தனது மகளைப் பார்ப்பதற்காக மதுரை வந்தபோது அவரைப் போலீஸார் கைதுசெய்தனர். எல்லீஸ் சந்திரன் என்பவரின் உறவினர்தான் இந்த போஸ். தலைமறைவாகியுள்ள மிசா. பாண்டியனுடன்,எல்லீஸ் சந்திரனும் உள்ளார்.

மைசூரில் உள்ள போஸின் வீட்டில், டிசம்பர் 10ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மிசா. பாண்டியன், அவரது டிரைவர்முத்துப்பாண்டி, எல்லீஸ் சந்திரன் ஆகியோர் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம்போரவூரணிக்குச் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை.

போஸ் மீது இந்திய குற்றவியல் சட்டம் 212ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+