அமைச்சரின் மகளிடம் நகை பறித்தவருக்கு வலைவீச்சு
கோவை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனின் மகளைத் தாக்கி நகை பறித்தவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கப்பாளாங்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அ.தி.மு.க வில் தெற்கு மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா, மத்திய அமைச்சர் கண்ணப்பனின் மூத்த மகள் ஆவார்.
சுலோச்சனாவின் மகள் கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபுவுக்கும் திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பின்னர் பொள்ளாச்சியில் வசித்து வந்தனர். பொங்கலை முன்னிட்டு மகளைக்காண சுலோச்சனா சென்றார்.
அங்கு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், சுலோசனாவை மருமகன் சுரேஷ்பாபு தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில்கிடந்த நகையைப் பறித்துக் கொண்டு சென்று விட்டாராம். இது தொடர்பாக போலீசில் சுலோச்சனா புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்பாபு மற்றும் அவரது சகோதரர் சிவமணி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications