கிழக்கும், தெற்கும் .. ஒரு கலாச்சார சந்திப்பு
மதுரை:
மத்திய அரசின் கலாச்சார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 30 மாணவ,மாணவியர், மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்து தமிழக ஊரக கலாசாரத்தை நுகர்ந்துகொண்டுள்ளனர்.
மேகாலயாவின் கிழக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாணவ, மாணவியர். நேரு யுவகேந்திராவும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் இணைந்து கலாச்சார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் இந்தமாணவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளன.
10 நாள் சுற்றுப்பயணம் புதன்கிழமையுடன் முடிகிறது. இந்த பத்து நாட்களும் மேகாலயா மாணவர்கள், மதுரைமாவட்டம் எஸ்.வைகைகுளம், ஓடைப்பட்டி, அத்திப்பட்டி, அதிகாரிப்பட்டி, பாலமேடு, ஒத்தக்கடை ஆகியகிராமங்களில் உள்ள கிராமத்து மக்களின் வீடுகளில் தங்கியிருந்தனர். அப்பகுதி இளைஞர் கிளப்களும் மேகாலயாமாணவர்களைக் கவனித்துக் கொண்டன.
தங்களது கிராமத்து அனுபவங்கள் குறித்து மாணவர்கள் கூறுகையில், கிராமத்து வாழ்க்கையை நன்றாகஅனுபவித்தோம். இந்த கிராமங்கள், ஊர் மக்கள், உணவு, சூழ்நிலை அனைத்தும் எங்களைக் கவர்ந்து விட்டனஎன்றனர். தமிழர் திருநாளான பொங்கலையும் இந்த மாணவ, மாணவியர் கிராமத்துச் சூழ்நிலையில், கிராமத்துமக்களோடு கொண்டாடினர்.
புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை செல்கின்றனர். புதன்கிழமைமேகாலயா திரும்புகிறார்கள்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications