எது இருந்தால் ஜாதி உணர்வு போகும்?
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஜாதி உணர்வு முன்பு இல்லாததற்குக் காரணம், தமிழ் உணர்வு அதிகமாக இருந்ததே. இப்போது தமிழ் உணர்வுமங்கி விட்டதால், ஜாதி உணர்வு தலை தூக்கி விட்டது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் ஆலடி. அருணாகூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தைத் திறந்துவைத்து ஆலடி அருணா பேசுகையில், முன்பு தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு அபரிமிதமாக இருந்தது. எனவே ஜாதிப்பிரச்சினைகள் எழவில்லை. இப்போது அந்த நிலை மாறி விட்டது.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் உணர்வு குறைந்து விட்டது. இதன் காரணமாக ஜாதிப் பற்று வளர்ந்து, ஜாதிஉணர்வு அதிகரித்து விட்டது. இதைச் சரி செய்ய மீண்டும் தமிழ் உணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications