8 போதும், ஆளை விடுங்கள் .. எலிசபெத் டெய்லர்
வாஷிங்டன்:
8 கல்யாணம் செய்து கொண்டது போதும், ஆளை விடுங்கள் என்று கூறியிருக்கிறார் பிரபல இங்கிலாந்து நடிகைஎலிசபெத் டெய்லர்.
8 முறை திருமணம் செய்து அத்தனை பேரையும் விவாகரத்து செய்து புரட்சி செய்தவர் எலிசபெத் டெய்லர். 69வயதாகும் இந்த "கில்லாடி லேடி, சி.என்.என். டிவியில் கொடுத்த ஒரு பேட்டியில், இத்தனை கல்யாணம் செய்ததுபோதும் என்று கூறியிருக்கிறார்.
எலிசபெத் டெய்லரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் ...
எனது 8 கணவர்களில் 2 பேரை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. ஒருவர் ரிச்சர்ட் பர்டன். (இவரை இரண்டுமுறை கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு முறையும் டைவோர்ஸ் செய்தார் டெய்லர்). இன்னொருவர்மைக்கேல் டோட். (இவர் திருமணமான 13 மாதங்களில் விமான விபத்தில் இறந்தார்.)
விர்ஜீனியா எம்.பி. ஜான் வார்னர் மீது எனக்கு இன்னும் பரிவு உண்டு. இவருடன் நான் சில காலம்தான்வாழ்ந்திருக்கிறேன். இருந்தாலும் இன்னும் பாசத்துடன்தான் இருக்கிறேன்.
என் மனதைக் கவராதவர்களில் முக்கியமானவர் குரூனர் எட்டி பிஷர். இவரை 1958-ம் ஆண்டு திருமணம்செய்தேன். அவரது மனைவி டெபி ரெனால்ட்ஸிடமிருந்து குரூனரை அபகரித்தேன். ஆனால் அவரது பெயரைக்கூட உச்சரிக்க இப்போது விரும்பவில்லை. (டெபி ரெனால்ட்ஸும், டெய்லரும் சேர்ந்து இபபோது ஒரு டிவி படம்எடுத்துள்ளார்கள். அடுத்த மாதம் இது ஒளிபரப்பாகவுள்ளது). அதெல்லாம் பழைய கதையாகி விட்டது இப்போது.
மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். 8 போதும். இதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் நகைச்சுவைஉணர்வு கொண்ட, நல்ல மனிதர் யாராவது கிடைத்தால் அவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசிப்பேன்என்றார் எலிசபெத்.
செய்தாலும், செய்வார் எலிசபெத்.