புயல் சேதம் .. மத்திய குழு பாண்டி. வருகிறது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதவிவரங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் 5 உறுப்பினர் நிபுணர் குழு புதன்கிழமை டெல்லியிலிருந்துவரவுள்ளது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான இக்குழுவினர் சேதவிவரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்.
இக்குழுவினர் முதலில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்துஆலோசனை நடத்துவர். பின்னர் வியாழக்கிழமை யூனியன் பிரதேச தலைமைச் செயலாளரிடம் பேச்சு நடத்துவர்.பின்னர் 19ம் தேதி காரைக்கால் பகுதிக்குச் செல்வர். 20-ம் தேதி டெல்லி திரும்புவர்.
யூனியன் பிரதேச செய்திக்குறப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications