மொரீஷியஸ் பிரதமர் சென்னை வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெகன்னாத் 2 நாள் பயணமாக சென்னைக்கு வியாழக்கிழமை வருகிறார்.
மாலை 5.50 மணிக்கு சென்னை வரும் ஜெகன்னாத், ராஜ்பவனில் ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்திக்கிறார்.பின்னர் அவர் அளிக்கும் இரவு விருந்தில் இரவு 7.30 மணிக்க் கலந்து கொள்கிறார்.
20-ம் தேதி தரமணியில் உள்ள டைடல் பூங்காவுக்கு காலை 9.10 மணிக்கும், தேசிய கடலியல் ஆய்வுக் கழகத்திற்குகாலை 10.40 மணிக்கும் செல்லவிருக்கிறார்.
நண்பகல் 12.15 மணிக்கு வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார்.
மாலை 4.00 மணிக்கு சென்னை பல்கலை கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.அப்போது அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும.
மாலை 6.00 மணிக்கு அவர் சிறப்பு விமானம் மூலம் மும்பை கிளம்பி செல்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications