கோவையில் இந்திய மாணவர் சங்க மாநாடு
கோவை:
இந்திய மாணவர்கள் சங்க மாநாடு கோவையில் முதல் முறையாக நடக்கிறது.
கோவையில் வரும் 19ம் தேதி இந்திய மாணவர்கள் சங்க மாநாடு நடக்கிறது. இந்தியமாணவர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் இது குறித்து நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்திய மாணவர்கள் சங்கம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டிவரும் 19ம் தேதி கோவையில் இந்த மாநாடு முதல் முறையாக நடத்தப்படுகிறது.
நாடு ழுவதும் இந்திய மாணவர்கள் சங்கத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில்மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையைக் கொண்டு அமையும்.
கல்வி நிறுவனங்கள் இப்போது வியாபார நிறுவனங்களாக மாறி வருகின்றன. இந்தநிலையை மாற்றி அமைக்க வேண்டும். அரசு கல்லூரிகள் அனைத்திலும் கம்ப்யூட்டர்வகுப்புகளைக் கொண்டு வர வேண்டும். இந்த கம்ப்யூட்டர் வகுப்புகளினால், ஏழைஎளிய மாணவர்கள் பயன்பெற முடியும்.
தனியார் கல்லூரிகளில் உள்ளதைப் போலவே வேலைவாய்ப்புடன் கல்வி என்றதிட்டத்தையும் இதில் அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பல்கலைக் கழக செனட்உறுப்பினர் பதவியில், மாணவர்களுக்கும் பங்களிக்க வேண்டும் போன்றகோரிக்கைகள் இந்தக் கூட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications