கூட்டணி யாருடன் .. விவாதிக்க கூடுகிறது த.மா.கா.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்வியாழக்கிழமை மாலை கூடுகிறது.
அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் தலைமையில் கூடுகிறது. கூட்டத்தில்மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மாநில நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசுடன்தான்த.மா.கா. கூட்டணி என்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கனவே மூப்பனார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி உண்டா என்பது குறித்தும், ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம்இருக்கிறதா என்பது குறித்தும் அரசியல் விவகாரக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.இதுதவிர, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்பதுஏற்கனவே முடிவாகி விட்டது. காங்கிரசாரிடம் கூட்டணி குறித்துப் பேசப்படும். த.மா.கா. கூட்டணியில்இடம்பெறுமா என்பது குறித்து மூப்பனாரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தநிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெறும் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications