ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் அவிநாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைசெய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த தற்கொலை நிகழ்ந்ததாகக்கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர்சின்னிய கவுண்டர் (வயது 48). இவர், திருமணமாகாத தங்கை ஜோதிமணி (40) மற்றும்மகன் மோகன் (17) ஆகியோருடன் வசித்து வந்தார். ஜோதிடத்தைத் தொழிலாகசெய்து வந்தார்.
சின்னியக் கவுண்டருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் தனது தங்கை மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து தானும்குடித்தார். இதில் மூன்று பேரும் இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications