எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்திற்கு சர்வதேச நிதி உதவி
பாண்டிச்சேரி:
கனடாவில் இருக்கும் சர்வதேச ஆய்வு வளர்ச்சி மையம், எம்.எஸ். சுவாமிநாதன்ஆய்வு மையத்திற்கு நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
கனடாவில் அமைந்திருக்கும் சர்வதேச ஆய்வு வளர்ச்சி மையம் (ஐ.டி.ஆர்.சி.),எம்,எஸ் சுவாமிநாதன் ஆய்வு மையத்திற்கு (எம்.எஸ்.எஸ்.ஆர்.எப்.)மூன்றுவருடங்களுக்கு நிதி உதவி செய்ய இருப்பதாக ஐ.டி.ஆர்.சி.-ன் பிரதிநிதி டாக்டர்ரெனால்ட் லாபான்ட் சனிக்கிழமை தெரிவித்தார்.
கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் மையத்தை துவக்கி வைத்து பேசிய அமெரிக்கஅறிவியல் அகாதமியின் தலைவர் டாக்டர் புரூஸ் அல்பெர்ட்ஸ் பேசுகையில், இதுபோன்ற மையங்கள் இளைஞர்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்புகளைஅளிக்கும். இது கிராமப்புறத்தில் இருப்பவர்களின் அறிவுகூர்மை பெற உதவும் எனகூறினார்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய விஞ்ஞனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில்வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 207 கிராமங்களில் உள்ள மக்களின் தரத்தை2007-ம் ஆண்டுக்குள் உயர்த்த முடிவெடுத்துள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.