கூட்டணி விவகாரம் .. சென்னை வந்தார் காங். தலைவர்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்தகாங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. சமீப காலமாகஅதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக உரசல்கள் இருந்து வருகின்றன.
இதுதவிர, அதிமுக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருப்பினும், எத்தனை மோதல்கள்இருந்தாலும் கூட்டணியில் பிரிவு ஏற்படாது என்று இரு தரப்பு தலைவர்களும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கூட்டணி குறித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் மேலிடம் சார்பில் பிரணாப் முகர்ஜி சென்னைவந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவர் சனிக்கிழமை மாலை சந்திக்கிறார். அதன் பிறகுதமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கருப்பையா மூப்பானரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications