எம்.எல்.ஏவுக்கு அஞ்சலி .. சட்டசபை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மயிலாடுதுறை எம்.எல்.ஏ. அபுல் ஹசனின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தி விட்டு தமிழக சட்டசபைசனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

அபுல் ஹசன் 1991 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்குப்பின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் 1996 ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்து வந்தார்.

சனிக்கிழமை தமிழக சட்டசபை கூடியதும் முதலில், மறைந்த அபுல் ஹசனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் அபுல் ஹசன் மறைவுக்கு அதிர்ச்சிதெரிவிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

இரங்கல் தீர்மானம் மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், ஹசன் ஈடுஇணையில்லாத மனிதர். எனது நீண்ட கால தோழர் மட்டுமின்றி நீண்ட காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுவந்தவர்.

எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அவர், யாருடைய மனதும் புண்படும்படி நடந்து கொண்டது கிடையாதுஎன்றார்.

பல்வேறு கட்சிகளும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துப் பேசினர். கல்வி அமைச்சர் அன்பழகன், எம்.எல்.ஏ.அபுல் ஹசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். சபையில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, சோனியா,சின்னசாமி, குமாரசாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் லட்சுமணன், பழனிசாமி, (சிபிஐ), சுந்தரம் (அதிமுக), கணேசன் (பாமக), அப்துல்லத்தீப் ( இந்திய தேசிய லீக்), ஹேம சந்திரன் ( சிபிஐ எம்), வேலாயுதம் ( பாஜக), பேராசிரியர் தீரன் (சுயேச்சை)ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதியில் அபுல் ஹசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+