எத்தனை தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.?
கோவை:
தேர்தல் நேரத்தில்தான், எத்தனை சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதுபற்றி முடிவு செய்வோம் என கோவையில் பேசிய மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோதெரிவித்தார்.
கோவை ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் வைகோ கலந்துகொண்டார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விஷ்வ இந்து பரிஷத் ஓராண்டில் பிரச்னைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம்என அறிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறு பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் கட்ட இந்தஅரசு அனுமதிக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல் திட்டத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே, இது விஷ்வ இந்து பரிஷத்தின்அறிவிப்பு மட்டுமே.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதை ஒரு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.அப்போதே நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். இப்போதுள்ள அரசு, பிரச்னைக்குரியஇடத்தில் கோயில் கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராது.
காஷ்மீரில் பரூக் அப்துல்லாவைக் கொல்ல நடந்த முயிற்சியினால், தீவிரவாதத்ததிற்குபாகிஸ்தான் உதவி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான பாரதிய ஜனதா, வரும்சட்டசபைத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுவது எனக் கூறுவது அவர்களது உரிமை.இது பற்றி விமர்சனம் செய்ய வேண்டியதில்லை.
தேர்தல் நேரத்தில், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி நாங்கள் முடிவுசெய்வோம்.
மேற்கு வங்காளத்தில் நடக்கும் ஆட்சியைக் கலைக்கச் சொல்லத் தேவையில்லை. வரும்தேர்தலில் அங்கு கம்யூனிட் கட்சியைப் பொதுமக்களே தூக்கி எறிந்து விடுவர் எனக்கூறினார்.