மாடு முட்டி வாலிபர் மூளை சிதறி சாவு
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள அம்மாபேட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை மோதியதில் வாலிபர் மூளை சிதறி, குடல் சரிந்து இறந்தார்.
தஞ்சையை அடுத்துள்ளது மாதாக்கோட்டை கிராமம். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காகபக்கத்து ஊர்களில் இருந்து கொம்பு சீவப்பட்ட காளைகள் மாதாக்கோட்டைக்குக் கொண்டு வரப்படும். அதேபோல் வெள்ளிக்கிழமையும் காளைகள்கொண்டு வரப்பட்டன.
போட்டிக்காக கொண்டு வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டதும், போட்டியில் கலந்து கொள்ள வந்திருத இளைஞர்கள்ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்றனர்.
அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து மனிதர்களை முட்டிவிட்டு ஓடின. இதில் பலர் காயமடைந்தனர். தஞ்சை அம்மன்பேட்டையைச் சேர்ந்த ராஜூஎன்பவரை காளை முட்டியதில் அவர் குடல் சரிந்து இறந்தார்.
அவரது மூளையும் சிதறி வெளியே விழுந்தது. இதைப் பார்த்த பொது மக்கள் மூளையை ஒரு காகிதத்தில் எடுத்து போட்டு அவரை மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தஞ்சையில் வேறொரு இடத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளை ஒன்று, பட்டாசு வெடித்த சத்தத்தைக் கேட்டு மிரண்டு ஓடியது.
அது அருகிலிருந்த வீடு ஒன்றில் புகுந்தது. வீட்டிலுள்ளவர்கள் மிரட்டியதில் பயந்து மாடியில் ஏறி அங்கிருந்து கீழே குதித்து இறந்தது.












Click it and Unblock the Notifications