For Daily Alerts
Just In
திருடினார்.. அடிபட்டார்.. உயிரிழந்தார்
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே, செஞ்சேரி என்ற கிராமத்தில், திருடன் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்துஅடித்துக் கொன்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்தது. செஞ்சேரி கிராமத்து மக்களிடம் வெங்கடேசன் (27) என்றநபர் சனிக்கிழமை இரவு திருட முயற்சி செய்தபோது பிடிபட்டார்.
பொதுமக்களிடம் சிக்கிய வெங்கடேசனுக்கு தர்ம அடி விழுந்தது. அடி தாளாமல் அவர் ரத்த வெள்ளத்தில்மயங்கினார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெங்கடேசன் படுகாயமுற்று இறந்து விட்டார்.
இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள வெங்கடேசனின் வீட்டுக்குத் தகவல் கூறி அனுப்பினர். வந்து, பிணத்தைஎடுத்துச் செல்லுமாறு கூறி விட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்து, அவர்கள் வருவதற்கு முன்பே, வெங்கடேசனின் உடலை கிராமத்துமக்கள் எரித்து விட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, January 22, 2001, 5:30 [IST]