போப்பாண்டவரின் கார்டினலாக இந்தியர் நியமனம்
வாடிகன் சிட்டி:
கிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவுத் தலைவர் போப் ஜான் பால், இந்தியாவைச் சேர்ந்த பேராயர் உள்பட 37 பேரை தனதுகார்டினல்களாக நியமித்துள்ளார்.
இந்தியர் ஒருவர் கார்டினலாக நியமிக்கப்படுவது இது 3 வது முறை. தற்போது கார்டினலாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பேராயர் பெயர் இவான் தியாஸ்(65). மும்பையைச் சேர்ந்தவர். இந்த நியமனம் மூலம் போப் ஆண்டரைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்களின் எண்ணிக்கை தற்போது 128 ஆக உள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள 37 கார்டினல்களில் யாராவது ஒருவர்தான் அடுத்த போப்பாண்டாவராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போப் ஆண்டவராக இருக்கும் ஜான்பால், உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் புதிய கார்டினல்களின் பட்டியலைஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் பின் அவர் வெளியிட்டார்.
வாடிகன் நகரில் பிப்ரவரி 21 ம் தேதி தற்போதைய போப் ஆண்டவர் ஜான் பால் அடுத்த போப் ஆண்டவர் யார் என்பதை அறிவிப்பார். ஒவ்வொரு வாரமும்அவர் ஆசிர்வாதம் செய்யும் செயின்ட் பீட்டர் பேராலய கட்டிட வளாகத்தில் அவர் இந்த முறை அடுத்த போப் ஆண்டவர் பெயரை அறிவிப்பார்.
தற்போதைய கார்டினல்கள் 37 பேரில் 7 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். 17 பேர் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச்சேர்ந்தவர்கள். இதன்மூலம் அடுத்த போப் ஆண்டவராக வளரும் நாடுகளைச் சேர்ந்தவர் ஒருவர் வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா, ஆசியா, இத்தாலி தவிர, கொலம்பியா, வில்னியஸ், பிரான்ஸ், அயர்லாந்து, பெரு, ஸ்பெயின், பிரேசில், லிமா, போர்ச்சுக்கல், வெனிசூலா,இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் கார்டினல்களாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications