ஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம்
சேலம்:
முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடிராமமூர்த்தியின் மகன் திருமணத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் நடத்திவைத்தார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி - கலைமணி தம்பதியரின்மகன் கர்ணன். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் பழனி - ராணிதம்பதியரின் மகள் லலிதாவுக்கும சேலத்திலிருக்கும் ரத்தினவேல் கவுண்டர் திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது,.
இந்த திருமணம் சீர்திருத்த முறையில் நடந்ததது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் எம்.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர்சயீத், தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் மங்கல நாணைஎடுத்துக் கொடுக்க அதை மணமகன் கர்ணன் மணமகள் லலிதாவுக்கு அணிவித்தார்.
இதன் பின் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செஞ்சிராமச்சந்திரன்,பாராளுமன்ற துணை சபாநாயகர் சயீத்.வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தீரன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களைவாழ்த்தி பேசினர்.
திருமண விழாவையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் பஙகாரு லட்சுமணன்,விஞ்ஞானி அப்துல் கலாம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்திஅனுப்பியிருந்தனர்.
வாழப்பாடி ராமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார், தண்டாயுதபாணி நன்றிகூறினார்.












Click it and Unblock the Notifications