புலிகளின் கண்ணிவெடிக்கு 11 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் வடக்குப்பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி 3 அதிகாரிகள் உள்பட 11 ராணுவ வீரர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், திங்கள்கிழமை நள்ளிரவு ராணுவ வீரர்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி புலிகளிடமிருந்து முகமலை என்றஇடத்தைக் கைப்பற்றினர்.
அந்த இடத்தில் புதன்கிழமை ராணுவ வீரர்கள் இறந்தோரின் சடலங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதுஅவர்கள் கண்ணிவெடியில் சிக்கினர். இதில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உள்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக, முகமலைப் பகுதியை ராணுவ வீரர்கள் கைப்பற்றுவதற்காக திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியபோது 25 புலிகள் இறந்தனர்.அதற்கு முன் ஜனவரி 16 மற்றும் 17 ம் தேதிகளில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 54 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 250 பேர்காயமடைந்தனர்.
தற்போது யாழ்ப்பாணத்தின் 85 சதவீத இடங்கள் ராணுவத்தின் வசம் உள்ளது. யானையிறவு பகுதியிலுள்ள 34.5 கிலோமீட்டர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications