நாம் இந்திய மக்கள் .. பாண்டி.யில் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
இந்தியாவின் 51-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாண்டிச்சேரியில் நாம் இந்திய மக்கள் என்ற தலைப்பில்அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியை தேசிய தொல்பொருள் மையம் மற்றும் பாண்டிச்சேரி தொல்பொருள் மையத்தினர் இணைந்துஅமைத்துள்ளனர்.
கண்காட்சியில் இந்திய ஜனநாயகம், நாடாளுமன்றம், அது செயல்படும் முறை, தலைவர்கள் குறித்த படங்கள்மற்றும் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு, 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி கிடைத்த முதல் குடியரசு தினவிழா மற்றும் இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பதவியேற்பு நிகழ்ச்சி ஆகியவை குறித்த படங்கள்மற்றும் கட்டுரைகள் கண்காட்சியில் இடம்பெறும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications