வீரப்பன் வேட்டையில் கேரள வீரப்பன் கைது
கோவை:
தமிழக வீரப்பனைத் தேடி அதிரடிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் "கேரள வீரப்பன் பிடிபட்டான்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி கேரள மாநிலப் போலீசாருடன் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வீரப்பனைப் போலவே கேரளாவில் சந்தன மரக் கடத்தல், யானைகளைக் கொன்றுதந்தங்களை எடுத்தல் ஆகிய தொழிலில் ஈடுபட்டிருந்தான். 35 வயதே ஆன சக்கரபாணி என அழைக்கப்படும்இவரை, சைலேந்திரபாபு தலைமையிலான அதிரடிப்படையினர் வேட்டையில் ஈடுபட்டபோது பிடித்தனர்.
இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது சக்கரபாணி மற்றும் இருவரைக் கண்டனர். அவர்கள்போலீசாரை நோக்கிச் சுட முயன்றனர். ஆனால் அதிரடிப் போலீசார் அவர்கைளச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சக்கரபாணியுடன் இருந்த சுந்தரன், பழனிச்சாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒருதுப்பாக்கி, தோட்டாக்கள் ஒரு கருங்குரங்கு தோல், கோடாரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மீது வன உயிரினங்களை வேட்டையாடியது, போலீசாரைக் கொல்ல முயற்சி செய்தது உள்பட பலபிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.