எம.எல்.ஏக்கள் நிதி உதவி
பெங்களூர்:
கர்நாடக ஜனதாதள் சட்டசபை உறுப்பினர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக அளிக்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. இதில் குஜராத் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. பாதிப்படைந்த குஜராத்மாவட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக கர்நாடக ஜனதாதள் சட்டசபை உறுப்பினர்கள் 1 மாத சம்பளத்தை கொடுக்கவிருப்பதாக அவைத் தலைவர்சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
குஜராத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா குஜராத் மக்களுக்கு ஆறுதல்கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது;
இந்த சோகமான நேரத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். உதவியின் முதல் கட்டமாக கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்கவிருக்கிறார்கள் என கூறியுள்ளார். சிந்தியா கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை அனைத்து கட்சிகூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யு,என்.ஐ.