வேலைநிறுத்தத்தைக் கைவிட வக்கீல்கள் முடிவு
ஈரோடு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப முடிவுசெய்துள்ளனர். வரும் 29ம் தேதி முதல் இவர்கள் பணிக்குத் திரும்புகின்றனர்.
ஈரோட்டில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர்விஸ்வநாதன், செயலர் திருமலைராஜன், அருணாசலம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தலைமை நீதிபதியை வக்கீல்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைநடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிபதி உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. எனவே வரும் ஜனவரி 29ம் தேதி முதல் நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.
மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் வக்கீல்கள் அங்குள்ள பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்கஅரசிடம் வேண்டுகோள் விடலாம். வேகமாகச் செயல்படக் கூடிய 49 நீதிமன்றங்கள் மத்திய அரசின் உதவியுடன்செயல்படத் துவங்கும்.
இந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே வக்கீல்களாகவும், நீதிபதிகளாக இருப்பவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நீதிமன்றங்களில் உடனடியாக தலைமை நீதிபதிகளை நியமிக்க வேண்டும் போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.