குஜராத் நிலநடுக்கம்: சாவு எண்ணிக்கை 2000 மாக உயர்வு

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

Qujarat Earth Quakeகுஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சாவு எண்ணிக்கை 2000 க்கும் மேல்உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை இந்தியாவின் 52 வது குடியரசு தின விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் போது குஜராத் மாநிலம்பூஞ்ச் என்ற இடத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத்தை உலக்கி எடுத்த இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 மாகஉயர்ந்துள்ளது. பூஞ்ச் என்ற பகுதியில் மட்டும் 650 பேர் இறந்தனர்.

Earthquakeஇதுதவிர ராஜ்கோட், அகமதாபாத், மோர்பி, பாடன், நவ்சாரி, சூரத், பலன்பூர், கோத்ரா பகுதிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டன.

அடுக்கு மாடிக் கட்டிடங்கள், ஹவுசிங் போர்டு வீடுகள், அரசு அலுவலகங்களில் தோண்ட, தோண்ட பிணங்கள்கண்டெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் இருந்துஏராளமானனோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் மற்றும்குழந்தைகள் ஆவர்.

வாஜ்பாய் வேண்டுகோள்:

Earthquakeபூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் குஜராத் மற்றும் பல மாநிலங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உதவுமாறுமேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அதிர்ச்சி:

பூகம்ப பாதிப்பால் கடும் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனும் பூகம்ப நிவாரணத்திற்கு உதவும்படிகேட்டுக் கொண்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+