வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு : 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரைக்கு அருகே நடந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் போது நடந்த வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 33 பேர்காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
சத்திரப்பட்டிக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்போது திடீரெனஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.
காயடைமந்தவர்களில் 24 பேர் சிகிச்சைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனதெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications