மூப்பனார் தலைமையில் புதிய கூட்டணி
சென்னை:
மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய கூட்டணி அமையும் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பன் சனிக்கிழமைதெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது.
தமிழக மக்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியால் சோர்வடைந்து விட்டார்கள். அவர்களுக்கு மாற்றம் தேவை. ஊழல் மற்றும் வன்முறைஇல்லாத கட்சியால்தான் தமிழக மக்களுக்கு நல்லாட்சியைத் தர முடியும்.
தமிழக ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்கு மூப்பனார் கண்டிப்பாக தலைமையேற்பார். அவரிடம் கூட்டணிக்கு தலைமையேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் இதுகுறித்துப் பேசினோம். அவர் புதிய கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறார். மேலும் பாட்டாளிமக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பினால் அக்கட்சியினரை ஏற்றுக் கொள்வோம்.
மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை, அவற்றின் பலம் ஆகியவற்றைப் பொறுத்து தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்வோம். மூப்பனாரின்முடிவைப் பொறுத்து எங்களது கட்சியின் அடுத்த கட்ட விவாதங்கள் நடக்கும் என்றார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications