குஜராத்துக்கு கர்நாடகம் ரூ 5 கோடி உதவி
பெங்களூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாசனிக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூரில், அகில இந்திய பத்திரிக்கை ஊழியர்கள் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், குஜராத் நிலநடுக்கத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நல்ல நாளில் நெஞ்சை அடைக்கும் சோகம் நிகழ்ந்தது ரண வேதனையாக உள்ளது.
திரும்பிய திசையெல்லாம் சடலங்களாகவும், மனித தசைத்துண்டுகளும் கிடப்பது நெஞ்சைப் பிழிய வைக்கிறது. மத்திய அரசு போதிய அளவு நிவாரண உதவிஅளித்துள்ளது திருப்தியளிக்கிறது. கர்நாடகமும் முடிந்த அளவு குஜராத்துக்கு நிதியுதவி செய்யும். குஜராத்துக்கு ரூ 5 கோடி நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதவிர உணவுப் பொட்டலங்கள், மருத்துவக்குழு, துணிமணிகள், போர்வைகள் போன்றவற்றை அனுப்பவுள்ளோம். முதலில் கிடைத்த செய்திகளை விடதற்போது நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. இது மிகவும் வேதனையான விஷயம் என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications