புலிகளை ஒழிக்க முன்வருகிறது ரஷ்யா
மாஸ்கோ:
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதில் இலங்கைக்கு ரஷ்யா உதவ முன்வந்துள்ளது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சனிக்கிழமைதெரிவித்தார்.
தற்போது, ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கதிர்காமர், சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பதன் ஒரு பகுதியாக, இலங்கையில்விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கு ரஷியா உதவி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது செசன்ய தீவிரவாதிகள்- விடுதலைப்புலிகள் தொடர்பு குறித்து விவாதிக்கவில்லை.எனினும் சர்வதேச உதவி செசன்ய தீவிரவாதிகளுக்கு கிடைப்பதாக ரஷியா கருதுகிறது.
மேலும், பிரிட்டனில் தீவிரவாதிகள் தடுப்புச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால் தங்கள் அமைப்பை பிரிட்டன் தடை செய்யக்கூடும் எனஅஞ்சியே விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். எனினும், விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்பதால் தான் இந்தியாவும்,அமெரிக்காவும் அவர்களுக்கு தடை விதித்துள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.