மும்பையில் நிலநடுக்கம்
மும்பை:
குஜராத்தில் பூகம்பச் சாவு 10,000 மாக உயர்ந்துள்ள நிலையில் மும்பையிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் காரணமாக மும்பை நகர் மற்றும் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புறநகர் பகுதிகளில் பல மாடிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதுகுறித்து மும்பை தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் கூறுகையில், மும்பையின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பலமாடிக்கட்டிடங்கள் மற்றும் காலனி வீடுகள் இடிந்து விழுந்தன என்றனர்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தானே, பான்வேல் பகுதிகளில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. குடிசைப்பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி ஓடினர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கட்டில்கள், பிற சாமான்கள் கவிழ்ந்து விழுந்தன.
மேலும் மனோரி, மாலட், விஹார், துளசி ஏரி, கொய்னா மற்றும் பாவோய் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 1960 ம் ஆண்டு மகாராஷ்டிரமாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு இப்போது தான் அதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம்எதுவும் ஏற்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications