ம.தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை

Subscribe to Oneindia Tamil

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லபட்டார். மேலும் ஒருவர்உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

திருச்சிக்கு அருகே இருக்கும் மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது மேல் பஞ்சாயத்து. இங்கு வசித்த்துவருபவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகன் சங்கர் (31). இவர் ம.தி.மு.க. கிளை செயலளாரக இருப்பவர்.இவர் திருச்சி பர்மா பஜாரில் பணி புரிந்து வருகிறார்.

இதே ஊரில் வசித்து வரும் சேட்டு என்றழைக்கப்படும் கணேசன் (60) என்பவரும், சங்கரும் ஊரில் நடக்கும்நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வந்தனர்.

இதே ஊரில் வசித்து வந்தவர் பாஸ்கர் (25). இவர் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் குடிபோதையில் பெண்களைவம்பிழுத்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிபோதையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் சேலையைபிடித்து இழுத்த குற்றத்திற்காக பஞ்சாயத்தாரின் முடிவின்படி சங்கரும், கணேசனும் பாஸ்கரை மரத்தில் கட்டிசவுக்கால் அடித்துள்ளனர்.

பாஸ்கர் தகாத செயிலில் ஈடுபடும் போது அவரை சங்கரும், கணேசனும் கண்டித்த வந்துள்ளனர். இதனால்கோபமடைந்த பாஸ்கர் வியாழக்கிழமை காலை துடையூர் அருகில் இருக்கும் வாய்காலில் குளிக்கச் சென்ற சங்கரைஅரிவாளால் வெட்டி சாய்த்தார். அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

ஊருக்குள் வந்த பாஸ்கர் எதிரில் வந்த கணேசனையும் வெட்டினார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெட்டிக் கொல்லப்பட்ட சங்கருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு 15 நாட்களில் திருமணம் நடை பெறஉள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்துபாஸ்கரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+