சுற்றுலா சென்ற 6 பேர் ஆற்றில் மூழ்கி சாவு
மைசூர்:
பெங்களூரிலிருந்து சுற்றுலா சென்ற 6 இளைஞர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெங்களூரிலிருந்து 14 இளைஞர்கள் மைசூருக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள்களில் 6 பேர் டி நரசிங்காபுரகதிற்கு அருகே இருக்கும் தலக்காடில் காவிரிஆற்றில் முழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிசி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது
இறந்தவர்கள் குருபிரசாத், கோபிநாத், ரவிகுமார், மகேஷ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 24 வயது இளைஞர்கள். நாகேந்திராஎன்ற 25 வயது இளைஞரும் இறந்துள்ளார்.
மேலும் வெள்ளிக்கிழமை நடந்த மற்றொரு சம்பவத்தில் சுமை ஏற்றி வந்த இரண்டு லாரிகளுக்கு நடுவே மொபெட்டில் வந்த மாணவர்கள் இருவர்சிக்கிக் கொண்டதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
இறந்த மாணவர்கள் யார் என தெரியவில்லை. அவர்கள் உடல்கள் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.