குஜராத்துக்கு ஆந்திரா ரூ 5 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உதவுவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் பூகம்ப பாதிப்பு குறித்த உயர் அதிகாரிகள் கூட்டத்திற்குப்பின், குஜராத் மாநிலத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மருந்துகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, குஜராத்திற்கு அனுப்பும்படி ஆந்திர மக்களை கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
உலகளவில் நிலநடுக்கம் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் ஆராய்வது அவசியம் என்ற நாயுடு, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடங்களைகட்டுவதற்கான தொழில்நுட்பம் வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications