இந்தியாவில் நிலநடுக்கம்... ரஷ்யாவில் பிரார்த்தனை
மாஸ்கோ:
குஜராத் மாநிலம் உள்பட இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சிறப்புபிராத்தனை நடந்தது.
இந்தியாவில் நிலநடுக்கம் என்ற செய்தி பரவியதும், ரஷ்யாவில் வாழும் நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடி விட்டனர்.
அவர்கள் அனைவரும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். குஜராத் மாநிலத்தில் பகுஜ்மாவட்டத்தில் உயிரிழந்த 650 பேரின் குடும்பங்களுக்காக அவர்கள் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் மிக எளிய முறையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சியின் போது இந்தியாவிற்கானரஷ்ய தூதர் லம்பா கூறுகையில், நாம் 52 வது குடியரசு தின விழா கொண்டாடும் நல்ல நாளில் காலடி எடுத்த வைத்த போதிலும், அதை மகிழ்ச்சியாகக்கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்காகவும், அவர்களின் நலனிற்காகவும்பிரார்த்தனை செய்வதே நமது தற்போதைய நோக்கமாக இருக்க வேண்டும். குடியரசு தின விழாவன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வரலாற்றில்அழிக்க முடியாத கறுப்புச்சின்னமாக அமைந்து விட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டதிலிருந்து இந்தியா - ரஷ்யா உறவு மிகவும்வலிமைடைந்துள்ளது. அவரது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, எண்ணெய் உற்பத்தி, பொருளாதாரம், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில்ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இரு நாட்டு அரசியல் தலைவர்களும், மக்களும்பெருமகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது மிகவும் சோகமயமானது என்றார் லம்பா. முன்னதாக, குடியரசு தின விழாவில் அவர் இந்தியதேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், புகைப்பட கண்காட்சிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications