மூப்பனார் - வீரமணி பேச்சுவார்த்தை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசை இணைக்கும் பணியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் மூப்பனாருடன்பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என தெரிய வந்திருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன.கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தற்போது த.மா.கா.வை அ.தி.மு.க.கூட்டணயில் இடம் பெற வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த முயற்சியில் பத்திரிக்கையாளர் சோவும், திரவிடர் கழக தலைவர் வீரமணியும் ஈடுபட்டுள்ளனர்.
மூப்பனாரை அவரது வீட்டில் சந்தித்து இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற மூப்பனாரின் கோரிக்கை தொடர்பாகஇவர்கள் மூப்பனாரை சமாதானப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய ஒரு குழு அமைத்து முடிவு செய்யவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு த.மா.கா. மற்றும் விடுதலை சிறுத்தை அமைப்புகள் எதிப்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்தும்இவர்கள் விவாதித்தனர்.
திருச்சியில் நடைபெற இருக்கும் தேசிய லீக் மாநாட்டில் மூப்பனாரூம், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications