சவக்கிடங்கான மருத்துவமனை
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பூகம்பத்தில் ஏற்பட்ட சாவுகளால் அங்குள்ள மருத்துவமனைகள் சடலங்களால் நிரம்பி வழிகிறது.
அகமதாபாத்தில் உள்ள வாடிலால் சாராபதி மருத்துவமனை முழுவதும் சவக்கிடங்காகி விட்டது. அங்குள்ள பிரேத பரிசோதனை அறையில் சடலங்களைத்தனித்தனியே வைக்க முடியவில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்று பிணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாகஅடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சர்தார் மருத்துவமனை முதன்மை டாக்டர் ஒருவர் கூறுகையில், ஒரு வயதான தந்தை தனது கடைசி மகனுடன் காயமடைந்த நிலையில் வந்தார். கை, கால்கள்இரண்டும் முறிந்த நிலையில் உள்ள அந்த சிறுவனைக் காப்பாற்றக்கோரி அவர் மன்றாடியதைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது.ஆனால் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை அவரிடம் நான் உறுதி செய்ததைப் பார்த்த போது, அவர் கண்ணீர் மல்க நின்ற காட்சிஎன்னை அழ வைத்தது.
நாங்கள் காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களில் கணவனை இழந்த மனைவி, குழந்தைகளை இழந்தபெற்றோர், பெற்றோரை இழந்து அனாதையாகத் தவிக்கும் குழந்தைகள் என்று மிகவும் பரிதாபமாக உள்ளது.
பகுஜ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி 420 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அனைத்து கிராமங்களும் அழிந்து விட்டன. அந்தகிராமங்களிலிருந்து ஒருவர் கூட பிழைக்கவில்லை. 40 வினாடிகள் தொடர்ந்து பூகம்பம் நீடித்ததால் அவர்கள் மரண ஓலமிட்டுக் கொண்டே இறந்ததுமிகவும் பரிதாபமாக இருந்தது.
பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்று கொண்டிருந்த கார் தாறுமாறாக ஓடிக் கவிழந்ததில் அதில் சிக்கிக் கொண்ட சிறுவன் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும், முஸ்லீம் அமைப்புத் தொண்டர்களும் இணைந்து சடலங்களை மீட்டு எங்களது மருத்துவமனைக்குக் கொண்டு வந்துசேர்க்கிறார்கள். ஒரு சோகத்துக்குப்பின் இறந்த இந்து - முஸ்லீம் சகோதரர்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மனிதநேயஅடிப்படையில் அவர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications