For Daily Alerts
Just In
குஜராத்துக்கு தமிழகம் ரூ 5 கோடி நிதியுதவி
சென்னை:
குஜராத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
குஜராத் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தமிழக ஆளுநர், முதல்வர், மற்றும் பல தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனுதாபத்தை தெரிவித்ததோடு அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ள தமிழக முதல்வர், நவீன உயிர்மீட்புக் கருவிகள், கட்டிடங்களை உடைக்கக் கூடிய நவீன எந்திரங்களுடன் தீயணைப்புத் துறை இயக்குநர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றையும் குஜராத்துக்குஅனுப்பி வைத்துள்ளார்.
Story first published: Saturday, January 27, 2001, 5:30 [IST]