குஜராத் பூகம்பம்: டாக்டர்கள் 1 நாள் ஊதியம் நன்கொடை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி டாக்டர்கள் சங்கம் சார்பில், குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு ஒரு நாள்சம்பளத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் திலீப் கே பாலியாவும், பொதுச்செயலாளர் டாக்டர் நாயுடுவும் தெரிவித்துள்ளதாவது:
பாண்டிச்சேரி மருத்துவ கழகம் கூட்டிய அவசர பொதுக்குழுவில் இது குறித்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அப்போது மருத்துவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
பாண்டிச்சேரி அரசு கேட்டுக் கொண்டால் குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்வது எனவும்,தங்களுக்கு வந்துள்ள மாதிரி மருந்துப் பொருட்களை குஜராத்துக்கு அனுப்புவது எனஇந்த கூட்டத்தில் மருத்துவர்கள் தீர்மானம் செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் நன்கொடை: இந்நிலையில் பாண்டிச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தங்கள் 1 மாத சம்பளத்தை பூகம்ப நிவாரண நிதிக்காக வழங்குவது என முடிவுசெய்துள்ளனர்.
பாண்டிச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜானகிராமன்வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குவிரைவில் நிவாரண நிதியை வசூலித்து அனுப்புமாறு பாண்டிச்சேரி முதல்வரைகேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.