For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தியானம் செய்ய முயன்றார்.. தீயில் கருகினார்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்:

தியானம் மூலம், தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வந்து, சாகசம் புரிய முயன்றவர், சாவைத் தொட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கவியரசு (22). பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர்அடிக்கடி தியானம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வரமுயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

உடலைச் சுற்றிலும் தீ வைத்துக் கொண்ட அவர் அங்கிருந்து வெளியேற முயன்றார். ஆனால் பரிதாபமாக தீக்குள்சிக்கிக் கொண்டார். இதில் நெருப்பில் கருகினார். உடனடியாக அவரை கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதற்கு முன்பு ஒருமுறை, 10 நாட்களாக சாப்பிடாமல் இருந்து உடலின் சக்தியைக் கூட்ட முயற்சி செய்தார் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X