ராமர் கோவிலா? நடக்காத காரியம்.. வைகோ
தர்மபுரி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் எண்ணம்நிறைவேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில்பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசுகளை பல முறை கவிழ்த்த போதும்மக்கள் ஆதரவுடன் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர்வாஜ்பாய் உலக நாடுகள் போற்றும் வகையில் ஆட்சி செய்வதாக கூறினார்.
வாஜ்பாயின் ஆட்சியில் தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஹஜ் பயணம்செய்துள்ளனர் என்ற வைகோ அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ ஹிந்துபரிஷத்தின் எண்ணம் ஈடேறாது என்றார்.
ஊழல் புரிந்ததால் தேர்தலில் நிற்க முடியாத நிலையில் உள்ள ஜெயலலிதாவுடன்கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்வானி பதவியில் நீடிப்பதுபற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications