தேசத் தந்தையை நினைவு கூர்ந்தது பாரதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 53 -வது நினைவு நாளானசெவ்வாய்க்கிழமை தலைவர்கள் பலரும் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி நாதுராம் வினாயக்கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த தினமான ஜனவரி 30-ம் தேதிதியாகிகள் தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது

ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர்வாஜ்பாய், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர்அத்வானி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜக்மோகன், டெல்லி முதல்வர் ஷீலாதீக்ஷித் உள்ளிட்ட பல தலைவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராஜ்காட்டில்அமைந்திருக்கும் காந்தி சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் நடந்த சர்வமத பிரார்த்தனையிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்தபிரார்த்தனையின் போது அனைத்து மத பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன.

பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜஹாங்கிர் காஷி, அவரது மனைவி, லெபனான் மற்றும்வங்கதேச தூதர்களும் பஜனையில் கலந்து கொண்டனர். அவர்கள் மகாத்மா காந்திசமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு

ராஜ்காட்டில் முப்படை தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் குஜ்ரால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாது காப்பு செயலாளர் யோகேந்தர் நாராயண் ஆகியோரும்கலந்து கொண்டனர்.

காந்தியின் நினைவு தினத்ததையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்ப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+