குழந்தைகளின் உடல் உறுப்புகளை அகற்றிய டாக்டர்
லண்டன்:
நூற்றுக்கணக்கான இறந்த குழந்தைகளின் உடல்களிலிருந்து உடல் உறுப்புகளைத் திருடிய இங்கிலாந்து டாக்டருக்குவாழ்நாள் தடை விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலன் மில்பான் செவ்வாய்க்கிழமைகூறியதாவது:
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் டிக் வான் வெல்ஸன். இவர் இங்கிலாந்தில் டாக்டராக இருந்து வருகிறார்.லிவர்பூல் நகரிலுள்ள ஆல்டர் ஹே மருத்துவமனையில் இவர் பணியாற்றுகிறார். தன்னிடம் சிகிச்சைக்காக வரும்குழந்தைகள் இறந்தால், அவர்களது பெற்றோரிடம் தவறான காரணங்களைக் கூறி தப்பித்து வந்துள்ளார்.
போஸ்ட் மார்ட்டத்தின்போது, இறந்த குழந்தைகளின் உடல்களிலிருந்து முக்கிய உறுப்புகளை எடுத்துள்ளார்.பின்னர் குழந்தைகளின் (முக்கிய உடல் உறுப்புகள் இல்லாத) உடல்களை, அவர்களது பெற்றோரிடம்கொடுத்துள்ளார். தங்களது குழந்தைகளின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டது கூட தெரியாமல் அவர்களும் இறுதிக்கடமைகளைச் செய்து வந்துள்ளனர்.
டாக்டர் டிக் வானின் செயல்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இதுவரை 2000-க்கும் மேற்பட்டகுழந்தைகளின் உடல்களிலிருந்து இவ்வாறு அவர் உறுப்புகளை எடுத்துள்ளார். இதயத்தை மட்டுமே அவர் விட்டுவைத்துள்ளார்.
அவரிடம், தற்போது பதப்படுத்தப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான குழந்தைகளின் தலைகள், உடல்கள்,மூளையின் சில பாகங்கள், கண்கள், பிறந்தவுடன் இறந்த சிசுக்கள் உள்ளன. இதுதவிர, 15,000க்கும் மேற்பட்டகருச்சிதைவான சிசுக்களும் உள்ளன.
இந்த டாக்டர் இனிமேல் இங்கிலாந்தில் டாக்டர் தொழிலில் ஈடுபட அனுமதிக்க மாட்டார். அவருக்கு வாழ்நாள்தடை விதிக்கப்படும். அவரது செயல் மன்னிக்க முடியாதது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காதவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலனைசெய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications