மத்திய சிறையில் கைதிகள் கலகம்
திருச்சி:
திருச்சி மத்தியை சிறை கைதிகள் புதன்கிழமை காலை போராட்டம் நடத்தினர்.
கைதிகள் தங்களை சிறை அதிகாரிகள் மருத்துவமனையிலிருந்து வரும்போதோ அல்லது நீதிமன்றத்திலிருந்துவரும்போதோ சோதனை செய்யப்படுவதை எதிர்த்து திருச்சி மத்திய சிறையிலிருந்த கைதிகள் போராட்டம்நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், புதன்கிழமை காலை சிறையில் இருந்த கைதிகள் மரங்களின் மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தனர். செவ்வாய்க்கிழமை சில கைதிகள் போதைப் பொருட்களை வைத்திருந்த போதுகையும் களவுமாக பிடிபட்டனர்.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சில கைதிகளிடம் நடத்தப்பட்டு சோதனைசெய்யப்பட்ட போது சிறையின் உள்ளிருந்த 3 பேரிடம் போதை மருந்துகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்கள் பிடிக்கபட்டதை எதிர்த்து சிறையிலிருந்த மற்ற கைதிகள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இவர்கள் தாங்கள்சோதனை செய்யப்படுவதை எதிர்க்கின்றனர்.மேலும் தங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும்போராட்டம் நடத்துகின்றனர்.
பிரச்சனை பெரிதானதும் மத்திய சிறையின் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைக்காவல்கள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று கைதிகளை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்துசிறை அதிகாரிகள் கைதிகளை அவரவர் அறைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர் என கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications