வந்தது மீட்புப்படை
ப்ரிடோரியா (தெ.ஆப்பிரிக்கா):
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 30 மீட்புப் படையினர் மற்றும் 4 மோப்ப நாய்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக மனித வளப் பிரிவு துணை இயக்குநர் கெவின் பிரினான் கூறுகையில், இந்தியாவுக்கு 30 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நவீன கனரக ஆயுதங்களும் கொடுத்து விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம்அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள்.
அவர்களுடன் டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா முழுவதிலுமிருந்து தொண்டு நிறுவன உறுப்பினர்களும் மீட்புப் படையினருடன்அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் செயல்படும் வாக்ஃபுல் வாக்பின் என்ற அமைப்பு மீட்புக் குழுவினர் செல்வதற்கான ஏற்பாடுகளைகவனித்து வருகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் குஜராத் மக்களால் அமைக்கப்பட்டுள்ள கவுன்டெக் இயற்கைச் சீற்ற நிவாரண நிதி அமைப்பு புதன்கிழமைஜோகன்னஸ்பெர்க்கில் கூடி இந்தியாவுக்கு நிவாரண உதவி செய்வது குறித்து விவாதித்தது. இதே அமைப்பு, 1999 ம் ஆண்டு 10,000 பேரை பலிவாங்கியஒரிசா புயலின் போது அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் பிரினான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications