வீரப்பனின் சிஷ்யன் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனிடம் ஆயுதப் பயிற்சி பெறச் சென்றதாகக் கைதான தீவிரவாதி அசன் அலிக்கு பவானி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
அந்தியூர் பர்கூர் காட்டுப்பகுதியில் கெட்டி சத்திரம் ஏரி நாராயணசாமி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய அசன்அலி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அவனிடம் நடந்த விசாரணையில் அவன் தமிழ்தேசிய மீட்பு படையைச் சேர்ந்தவன் என்றும், ஆயுதப் பயிற்சி பெற வீரப்பனைத் தேடிச் சென்றதும் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து அசன் அலியைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக பவானி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அசான் அலிக்கு குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications