விசுவை அழைக்கிறார் "மகாத்மா

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீணான அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து நம் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம். நம்வாக்குகளை உபயோகித்து சுயராஜ்ய நிர்வாக நடைமுறையை கொண்டு வருவோம் எனமகாத்மா காங்கிரஸ் என்ற புதிய கட்சி கூறியுள்ளது.

மகாத்மா காங்கிரஸ் என்ற கட்சி, 1998-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கரூர்மாவட்டம் புகழூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்சியின் கொள்கைகைகள் உள்ளாட்சிகளுக்கு முழு சுயாட்சி, வரி இல்லாத நல்லஆட்சி, மக்கள் கமிட்டியின் கீழ் ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடம், பேரூராட்சி மக்கள்கமிட்டியின் கீழ் பஞ்சாயத்துக் கோர்ட், ஊர்க்காவல் படையின் மூலம் கள்ளச்சாராயம்,ஆபாச சுவரொட்டிகள், விபச்சாரம் போன்றவற்றை அழிப்பதாகும்.

இந்த கட்சி தற்போது வழக்காடு மன்ற புகழ் டாக்டர் அறிவொளியை கரூர் தொகுதியிலும்,பட்டிமன்றம், நகைச்சுவை பேச்சுகள் மூலம் புகழ் பெற்ற லியோனியை திண்டுக்கல்லிலும்,அரட்டை அரங்கம் புகழ் மற்றும் திரைப்பட இயக்குனரான விசுவை ஸ்ரீரங்கம்தொகுதியிலும் தேர்தல் வேட்பாளராக நிற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களுக்குதங்கள் கட்சி ஆதரவு தரும் எனவும் கூறியுள்ளது.

இது பற்றி இந்த கட்சி கூறுகையில் உளுத்துப்போன அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்துநம் வாக்குகளை வீணாக்க வேண்டாம். உண்மையான மக்களாட்சியும், கிராம் சுயராஜ்யநிர்வாக நடைமுறை செயலுக்கு வர விருக்கும் தேர்தலை உபயோகப்படுத்துவோம் எனகூறியுள்ளது.

இந்த கட்சி சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+