ஜனாதிபதி உரை .. கருத்துத் தெரிவிக்க பிரதமர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லோக்சபாவுக்கு ஐந்தாண்டு நிலையான பதவிக்காலம் குறித்து குடியரசு தின உரையின்போது, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் அதிருப்தி தெரிவித்தது குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார்.

சென்னை எண்ணூ

லோக் சபாவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவதற்கு முன் அது கலைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்,சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக அரசியல் மறு ஆய்வுக் கமிட்டியை பிரதமர் வாஜ்பாய் அமைத்திருந்தார்.இந்தக் கமிட்டியும், அரசியல் சட்டத் திருத்தம் குறித்த தனது ஆய்வை ஏற்கனவே துவக்கி விட்டது.

ஆனால், தனது குடியரசு தின உரையின்போது இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டதற்கு ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அரசியல் சட்டத்தை நிர்ணயித்தவர்கள், அதை ஆழ்ந்தநோக்குடன்தான் தயாரித்துள்ளார்கள். எனவே அதை மாற்றத் தேவையில்லை என்று கூறியிருந்தார் நாராயணன்.

ஜனாதிபதியின் பேச்சுக்கு, பாரதீய ஜனதாக் கட்சி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதியின் உரை,உள்நோக்கம் கொண்டதாக அது வர்ணித்திருந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+