தப்பிய தமிழ்க் குடும்பம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்கு வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 நாட்கள் உயிர்ப் போராட்டத்திறகுப் பிறகுமீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம் காந்திதாமில் வசித்து வந்தவர் சில்வோரா செல்லப்பன். இவர் அங்கு கணக்காளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40).
கடந்த 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்ட போது கணவன், மனைவி, அவர்களது 6 வயது மகள் ஆகியோர் தங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்தனர்.திடீரென்று கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இவர்கள் சிக்கிக் கொண்ட சமையலறை மட்டும் விழவில்லை. சமையலறையைச் சுற்றியுள்ளஅனைத்து பகுதிகளும் இடிந்து தரைமட்டமாயின.
இவர்கள் சமையலறைக்குள் சிக்கிக் கொண்டதால் இவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. சமையலறையில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீர்மற்றும் சில தக்காளிப் பழங்களை வைத்து அவர்கள் 6 நாட்களாக உயிர் வாழ்ந்தனர்.
இவர்களது 6 வயது மகள், தண்ணீர், தண்ணீர் என்று தவித்துக் கொண்டேயிருந்தார். அதற்குப்பின் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இவர்களைமீட்டனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த வசந்த காந்தி என்ற 51 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக மருத்துமனையில்சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் தேறி வருகிறார். காந்தியின் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
பூஜ் நகரில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த பிரியங்கா என்ற 13 வயது சிறுமி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தார். ராணுவவீரர்களும், சர்வதேச மீட்புப் படையினரும் அங்கு சென்று பிரியங்காவை மீட்டனர்.












Click it and Unblock the Notifications